Sunday 4 November 2012

வங்கி அதிகாரிகள் எழுத்துத் தேர்வு: அம்பேத்கர் மைய மாணவர்கள் 17 பேர் வெற்றி

வங்கி அதிகாரிகள் பணி யிடங்களை நிரப்புவதற் கான எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடத்தப்பட்டு வரும் டாக் டர் அம்பேத்கர் கல்வி-வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று வரும் 17 பேர் வெற்றி பெற்றுள் ளனர்.19 பொதுத்துறை வங்கி கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றில் பணி யாற்றுவதற்கான ஊழியர் களைத் தேர்வு செய்யும் பணியை ஐ.பி.பி.எஸ் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இவற்றில் அதி காரிகள் பணிக்கான தேர்வு கள் நடந்து, அதற்கான முடி வுகள் அண்மையில் வெளி யாகின.வங்கித் தேர்வுகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் டாக்டர் அம்பேத்கர் கல்வி-வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று வரும் எட்டு பேர் 19 பொதுத் துறை வங்கி அதிகாரிகள் நியமன எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் கள். திருச்சி மையத் தில் மூன்று பேரும், மன்னார் குடி மையத்தைச் சேர்ந்த ஒருவரும் வெற்றியடைந் துள்ளார்கள். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி களுக்கான எழுத்துத் தேர் வில், மதுரை மையத்திலி ருந்து எட்டு பேரும், கோவை மையத்தைச் சேர்ந்த ஒரு வரும் வெற்றி பெற்றனர்.எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற் பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி நேர்முகத் தேர்வு போன்றவை அம் பேத்கர் பயிற்சி மையத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. மையத்தில் பயிலாமல் இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தலித் மற்றும் பழங் குடிப் பிரிவினரும் மாதிரி நேர்முகத் தேர்வுகளில் பங் கேற்கலாம் என்று மையத் தின் சார்பில் மாநில ஒருங் கிணைப்பாளர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment